என் கவிதையின் ஆதி

என் கவிதையின் ஆதி

About Me

My photo
jayankondam, tamilnadu, India

Friday, February 4, 2011

கிராமத்துக் காளை

மனசு விட்டு பேசணும் டி உங்கிட்ட மனசு விட்டே பேசணும் டி

பொத்தி வெச்ச ஆசையெல்லாம் சுக்கு நூறா போனதடி

இன்னும் கொஞ்சம் நீண்டுச்சின்னா சத்தியமா வெடிச்சிடும் டி
இதயம் செத்து செத்து வாழுதடி

நூறு முறை கண்ணடிச்சு உசிர் கசிய கை பிடிச்சு

சிரிக்கும் போது சிதறும் கொஞ்ச முத்தஎல்லாம் செற புடிச்சு

காத்துக்கும் வேர்க்கும்படி உன்ன நானும் கையனச்சி
இத்தனையும் நெனச்சிருந்தேன் பாவி விதி பிரிச்சிடிச்சே
ஒத்தையில விட்டுடுச்சே

மல்லி பூவா நீயிருக்க வாசமா நானிருந்தேன்
பூவுக்கு வாசம் தேவ எனக்கு நீ தேவ இத பிரிச்ச சாமி இதுதானா அது தேவ

பிரிய பிரிய கூடுதடி ஏக்கம் உன்ன பாக்கணும்னு கொரயுதடி தூக்கம்

கட்டி போட்டா குட்டி போடும் ஆச அடக்கி வெச்சா பத்திக்கிடும்

பத்திக்கிட்டா பத்தட்டுமே மாமன் இருக்கேன் தீயணைக்க
வெசனம் வேணா தூங்கு புள்ள

...................................................இதழ் சுந்தர்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
| - |