வானம் பார்த்த வறண்ட பூமியது
மழையாய் ஆங்கே வியர்வை துளிகள்
வானமும் பூமியும் அவனை உஷ்ணமாக்கி கொண்டிருக்க
கண்களில் மட்டும் குளிர்ச்சி
மாற்றான் தோட்டத்து மகசூல் கெடாமல்
உழுது கொண்டிருந்தான் அவன்
அவன் சிந்தனை எனும் சாட்டைக் குதிரையில்
மனைவியின் நப்பாசை,
பிள்ளைகளின் பாட சாலை பணம்,
நோயுள்ள தன் தாயின் உடல் நலம்
என பாரங்களாய் ரெக்கை கட்டி பறந்துகொண்டிருக்க
கையில் உடைந்த பானையால்
குதிரையை நிறுத்தினாள் அவனவள்
"குதிருக்குள் கிடந்த கடை நெல்லை குத்திப்பார்த்தேன் அரிசியில்லை
பாழாய் போன எலியும் நம் செல்ல பூனையும்
நம் வீட்டில் நண்பர்களாம்
அது காரணமாய் கரிப்பானையில் கிடந்த
நேற்று செய்த சுடுசோற்றை எடுத்து வந்தேன்
பட்ட மிளகாயுடன்
தலை வரப்பில் காலில் முள் குத்த
அனிச்சையாய் முள் எடுக்க கை போய்
நழுவியது பானை"
சொல்லி முடித்தாள் கண்களில் கண்ணீருடன்
அது கண்ணீர் அல்ல கடல் நீர்
விட்டுச்செல் என இருவரும் தொடங்கினர் மழை பொழிய
ஆழ உழுதான் அவளிடத்தில் வைத்துள்ள காதல் போல
தேக்கில் செய்த அவனது இயந்திர ஏர்
மண்ணில் நீச்சலடித்த அக்கணம்
மூச்சு திணறி முறிந்து இறந்தது
ஆனந்தம் தலைக்கேறிய அக்கணத்தில்
துள்ளாமல் துள்ளலை அடக்கி வைத்திருந்தன
அவனது காளைகள்
இனி இரு நாட்களாவது விடுமுறை என்கிற நோக்கில்
விதியை நொந்து மாட்டை கடிந்து சிக்கிகொண்டிருக்கும்
உடலின் மீத பகுதியை எடுக்க
கூடவே வந்தது தங்கச்சிலையும்
இதழ் சுந்தர் .......