என் கவிதையின் ஆதி

என் கவிதையின் ஆதி

About Me

My photo
jayankondam, tamilnadu, India

Friday, February 18, 2011

பாத முத்தம்


என்ன கர்வம் உன் கொலுசுகளுக்குநானே கொலுசுகளின் ராணி எனமெத்தனமிட்டு  சிரிக்கின்றன எனை பார்த்து

அழுகின்றன நீ கழற்றி வைக்கும் சமயத்தில்உன் மாநிற மேனியின் முத்தம் பெற இயலாமைக்கு

கொலுசுகளுக்கு உயிர் கொடுக்கும் உன் அழகியவளைந்த பாதங்களால்உயிர் கொடு எனக்கு உன் பாத முத்தத்தால்எனதுதட்டில்

ஆனால் கண்டிப்பாக இடமில்லை உன் கொலுசுகளுக்கு நமது படுக்கையில்…………………...இதழ் சுந்தர்

ஹைக்கூ


  • வெட்டிய உன் கால் நகங்கள் நினைத்துகொண்டன உன்னுடன் இருந்த   அவ்வழகிய தருணங்களை -பாம்புத்தோல்
       இதழ் சுந்தர் .......

Monday, February 14, 2011

மாவரம் செய்தேனடா தமிழனாய் பிறக்க

மாவரம் செய்தேனடா தமிழனாய் பிறக்க

Saturday, February 12, 2011

மெழுகு

 

 

 

 



மெழுகு- எரிய எரிய குறையும்....

குறைய குறைய  எரியும் !

Friday, February 4, 2011

தமிழ்

காதல் காப்பியங்களின் கருவே
தரணியில் மொழி தோன்றுதற்கு முதலாய் இருந்த தேனமுதே

உனை வாழ்த்தி பாடுதற்கே இசை பிறந்தது

உனை பார்த்தே மானுடர்க்கு நாகரிகம் எனும் தெளிவு பிறந்தது

உலகப்போட்டியில் உனக்கே முதலிடம் எதற்கெனில்

இலக்கணங்களும் இலக்கியங்களும் எட்டுக்களும் , பத்துக்களும்

காண்டங்களும் ,நானூருகளும் உனை வைத்தே எழுதப்பட்டன

உன் பெயர் சொல்லி கண்டங்கலெங்கும் தலை நிமிர்ந்து நடப்பேன் நான்

கவலைப்படாதே உனக்கெதிராக நீ பிறந்ததிலிருந்து

நடக்கும் போட்டி போரில் உன் சிப்பாய்கள் வீர மரணம் அடைந்தாலென்ன

நானிருக்கிறேன் உனது வாளும் கேடயமுமாய் உன் புகழ் பரப்ப

உனை மறந்திருப்பேன் அக்கணம் உன் மடியிலே வீழ்ந்திருப்பேன்

என் தங்க தமிழே ..........

........................................................ இதழ் சுந்தர் .

கிராமத்துக் காளை

மனசு விட்டு பேசணும் டி உங்கிட்ட மனசு விட்டே பேசணும் டி

பொத்தி வெச்ச ஆசையெல்லாம் சுக்கு நூறா போனதடி

இன்னும் கொஞ்சம் நீண்டுச்சின்னா சத்தியமா வெடிச்சிடும் டி
இதயம் செத்து செத்து வாழுதடி

நூறு முறை கண்ணடிச்சு உசிர் கசிய கை பிடிச்சு

சிரிக்கும் போது சிதறும் கொஞ்ச முத்தஎல்லாம் செற புடிச்சு

காத்துக்கும் வேர்க்கும்படி உன்ன நானும் கையனச்சி
இத்தனையும் நெனச்சிருந்தேன் பாவி விதி பிரிச்சிடிச்சே
ஒத்தையில விட்டுடுச்சே

மல்லி பூவா நீயிருக்க வாசமா நானிருந்தேன்
பூவுக்கு வாசம் தேவ எனக்கு நீ தேவ இத பிரிச்ச சாமி இதுதானா அது தேவ

பிரிய பிரிய கூடுதடி ஏக்கம் உன்ன பாக்கணும்னு கொரயுதடி தூக்கம்

கட்டி போட்டா குட்டி போடும் ஆச அடக்கி வெச்சா பத்திக்கிடும்

பத்திக்கிட்டா பத்தட்டுமே மாமன் இருக்கேன் தீயணைக்க
வெசனம் வேணா தூங்கு புள்ள

...................................................இதழ் சுந்தர்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
| - |